Tuesday, July 7, 2009

கவிதைகளுக்கு பிறந்தநாள்

“ இன்று என் கவிதைகளுக்கு பிறந்தநாள் “
இன்று வரை...
சிறை அடைந்த என் அத்தனை வார்த்தைகளும்
இன்று முதல் சிறகெடுக்கின்றன

என் முதல் காதல் தமிழ் மீது,
அவளுக்கும் எனக்கும் பிறந்த குழந்தைகள் தான்
என் கவிதைகள் !!!
என் குழந்தைகள்.... தாயைப் போல்
அழகானவள், தெளிவானவள்

"நீ குழந்தையாட ???????" என்று
விளங்காமல் கேட்கும் சிலருக்கு
விளக்கமாய் சொல்கிறேன்
இந்த தளத்திற்கு ஓர் குழந்தையாய்
கவிதை தமிழுக்கு ஓர் குழந்தையாய்
இவற்றில் எல்லாம் நடை பழகும் ஓர் குழந்தை !

வைரமுத்து தந்த....
"பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக
தேடி பார்த்தேன் " என்கிற வரிகள்
எனக்கு உகந்தவை !
என்னவளின் சுவாச காற்றை
தேடினேன், தேடுகிறேன், தேடுவேன் !
அவள் கிடைக்கும் வரை.
அந்த தேடலின்
கண்டு பிடிப்புகள் தான்
என் காதலும், என் கவிதைகளும்

ஊடல் தான் காதலின் ஆரம்பம் என்பார்கள்.
என்னை கேட்டால்....
என் தேடல் தான் காதலின் ஆரம்பம் என்பேன்!!
என்னை நனைத்த காதல் மழையின்
சில சாரல்களை மட்டும்
இங்கு தூவி விட்டு இருக்கிறேன்
இங்கு காதல் மட்டும்...
காதலில் மட்டும்.

வாசகர்களுக்கு ஓர் விண்ணப்பம்....
குழந்தைகள் கையில் கிடைத்த
பேப்பர், பேனாவைப் போல் தான்.
என் கையில் தமிழும், கவிதையும்
கிறுக்கல்கள் மட்டும் தான்....
குழந்தையின் கிறுக்கலை ஓவியமாய் பார்க்க தெரிந்தவர்கள்
தட்டி கொடுங்கள் !
குறை கண்டவர்கள்... சுட்டி காட்டுங்கள் !
இரண்டுக்குமே காத்திருக்கும் என் மனம்...........................................

No comments:

Post a Comment