Demo Site

Tuesday, November 8, 2011

குழந்தை தொழில்


*****தீபாவளி அன்று எழுதியது *******
அம்மா இந்த வெடி வாங்கி தாமா
என்ற படி ஒரு சிறுவன்
அம்மா இந்த வெடி வாங்கிகோங்கமா
என்ற படி இன்னொரு சிறுவன் 
ஒரே ஒற்றுமை யாதெனில் 
இருவருக்குமே பட்டாசு "வாங்கினால்" தான் தீபாவளி :(

Wednesday, October 19, 2011

Thursday, July 7, 2011

தவம் !

Saturday, May 7, 2011

Saturday, April 16, 2011

குழந்தைகள் :)


Saturday, March 19, 2011

புலம்பல்


Friday, February 18, 2011

எனக்காய்..



என்னால்..
தலை சுற்றுமாம்.
அடி வயிறு புரட்டுமாம்
தூக்கம் தூரமாய் போகுமாம்
பத்தாம் மாதம், உயிர் போய் உயிர் வருமாம்..
அன்னையாய் அவள்...

எனக்காய்..
சொந்தங்கள் அன்னியம் ஆனதாம்
கண்ணீர் மட்டும் சொந்தம் ஆனதாம்.
பூவுக்கு பிறந்தவள், முட்களுக்கு வாக்கபட்டாள்
சுற்றம்
எதிர்த்தால்
வீட்டிலும் ஒரு வேற்று க்ரஹ வாசியாம்
பொறுத்தால் அத்தனையும்
என்னவள் அவள்

Aristotle என்ன? Socrates என்ன?
"தாய்க்கு பின் தாரம்" என்று சொன்னவன் எவனோ அவனே... ஞானி!

Thursday, January 20, 2011

ஏக்கம்..


Tuesday, November 23, 2010

"அன்னையே" சிவம்.


ஒவ்வொரு நாளும்...
தாயுடனான வார்த்தை முடியும் நேரத்தில்,
"மறக்காமல் தினமும் சாமி கும்புடு டா "
என்று மறக்காமல் அவள் சொல்வதுண்டு

மறக்காமல் தினமும்,
நான் அவளிடம் பேசும் காரணம் அறியாமல்....
என்னென்று இதை நான் கொள்ள
ஆத்தீகம்  என்றா? இல்லை நாத்திகம் என்றா?

Sunday, November 21, 2010

தீபமே !


கார்த்திகை தீபம் இரவொன்றில்....
தீபங்களுக்கு நடுவில் அமர்ந்த படி நீ.                                                    

நட்சத்திரங்களுக்கு நடுவில்...
நகராத நிலவொன்று
உள்ளதென  நினைத்து
உறைந்தது வானம் !